கோவை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

கோவை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

அறிவிப்பு 

கோவையில் இருந்து பெங்களூருவிற்கும் பெங்களூருவில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவையில் இருந்து பெங்களூருவிற்கும் பெங்களூருவில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது .8 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் நாளை காலை ஐந்து மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 11:30 மணி அளவில் பெங்களூர் சென்றடையும் எனவும் பின்னர் மதியம் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்து சேரும் என ரயில்வே தரப்பில் அறிவிக்கபட்டுள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதி இந்த ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என நிர்வாக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags

Next Story