அதிமுக தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது: ஜெயராமன்

அதிமுக தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது: ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன் 

அதிமுக தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாநகர மேயர் கல்பனா,துணை மேயர் வெற்றி செல்வன்,கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,ஏ.கே.செல்வராஜ்,சிங்காநல்லூர் ஜெயராமன்,கவுண்டம்பாளையம்பி.ஆர்.ஜி.அருண்குமார்,கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன்,சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கோவையின் வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் மேற்கொள்ளபட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் கூற வேண்டிய அதிகாரிகளும் வரவில்லை எனவும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்ததாக தெரிவித்தார்.கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று என்றவர் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும் மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை என்றார்.அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500 ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளதாகவும் பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே இதற்கு உதரணமாக எனவும் அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றபடாமல் உள்ளது என்றார்.ஆளுனர் குறித்த எழுப்பிய கேள்விக்கு நன்றி வணக்கம் என பதில் அளித்துவிட்டு சென்றார்.

Tags

Next Story