மதுராந்தகத்தில் தர்பூசணி வாங்கி கொடுத்து பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகத்தில் தர்பூசணி வாங்கி கொடுத்து பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தர்பூசணி கொடுத்து வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் 

மதுராந்தகத்தில் வீதி வீதியாக சென்று கடையில் தர்பூசணி வாங்கி கொடுத்து பாமக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்,காஞ்சி பாராளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மெய்யூர், மாமண்டூர், புக்கத்துறை, சாலவாக்கம் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது புழுதிவாக்கம் கூட்டு சாலையில் உள்ள கடைகளில் வேட்பாளர் கடை கடையாக சென்று துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தார்.

அங்கு இருந்த தர்பூசணி கடையில் தர்பூசணி பழக் கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு வெப்பத்தை தணிக்க தொண்டர்களுக்கும் தர்பூசனி வழங்கினார். பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story