விவசாய நிலத்தில் களைக் கொத்தி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

தேன்பாக்கத்தில் விவசாயப்பணிகளை செய்து கொண்டிருந்த பெண்களிடம், களை அகற்றியவாறு, ,காஞ்சி பாராளுமன்ற பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்,காஞ்சி பாராளுமன்ற பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் இன்று செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூர், பொலம்பாக்கம், மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், அறப்பேடு,தேன்பாக்கம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் வாக்காளர்களிடம் வலைவீசி வாக்குகளை வேட்பாளர்கள் சேகரித்து வருகின்றனர்.. தேன்பாக்கத்தில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அங்கு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்..

பிறகு வயல்வெளியில் களைக் கொத்திக் கொண்டிருந்த பெண்களிடம் நேரடியாக சென்று வேட்பாளர் களை கொத்தி துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கி அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story