அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி தாெகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக 09.04.2024 ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பகுதிகளில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எடப்பாடியாரின் சாதனைகளைப் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்கு சேகரித்தார்.

அப்போது அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலு மணியும் உடன் இருந்தார். கோவங்காட்டில் பிரச்சாரத்தை துவங்கி பழையகாயல், அகரம், இடையர்காடு, கொற்கை, வாழவல்லான், உமரிகாடு, முக்கானி, ஏரல், சிறுதொண்டநல்லூர், திருப்பணிசெட்டிக்குளம், செபத்தையாபுரம், சாயர்புரம், சுப்பிரமணியபுரம், நட்டாத்தி, பண்ணைவிளை, பண்டாரவிளை, பெருங்குளம், சிவகளை, பேரூர், பேட்மாநகரம், அணியாபரனநல்லூர், மீனாட்சிபட்டி, ஸ்ரீமூலக்கரை, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்கற்குளம், கொங்கராயகுறிச்சி, ஆராம்பண்ணை, செய்துங்கநல்லூர், கருங்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், அரசர்குளம், கெட்டியம்மாள்புரம், திருவரங்கப்பட்டி, கால்வாய், ஆதிச்சநல்லூர், வெள்ளூர்,ஸ்ரீவைகுண்டம், திருப்புளியங்குடி, குலசேகரநத்தம், ஆழ்வார்தோப்பு, சிவராம மங்கலம் மற்றும் மங்கலகுறிச்சி என அனைத்து இடங்களிலும் தீவிரமாக வாக்குகளை சேகரித்தனர்.

Tags

Next Story