காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு...

திமுக

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பேருகண்டிகை, கடமலைபுத்தூர், தொழுப்பேடு, ஆத்தூர், எடையாளம், சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில் ,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் என்னுடைய இரு கண்கள் என சொல்லி சிறப்பான ஆட்சியை செயல்படுத்தி வருகிறார் எனவும், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார் எனவும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார் எனவும், ஆனால் பத்தாண்டு கால மோடி ஆட்சியில் மக்களுக்கு சொன்னதை எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story