மண்டைக்காடு கோவிலில் ரூ 16 லட்சம் உண்டியல் வசூல்

மண்டைக்காடு கோவிலில் ரூ 16 லட்சம் உண்டியல் வசூல்
உண்டியல் எண்ணும் பணி
மண்டைக்காடு கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த மாதம் 3-ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. அப்போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒன்பது நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு நேற்று திறந்து என்னப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம் , அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் சுய உதவிக் குழு பெண்கள் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 250 ரூபாய் ரொக்கமாகவும், 41 கிராம் தங்கம், 63 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

Tags

Next Story