பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.1 லட்சம் காணிக்கை

பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.1 லட்சம் காணிக்கை

எண்ணும் பணியில் பக்தர்கள் 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடாவிளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று முன்தினம் மாலை திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 444 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Tags

Next Story