பட்டாசுகளை வீடுகளில் இருப்பு வைக்க வேண்டாம் - ஆட்சியர் அறிவுரை

பட்டாசுகளை வீடுகளில் இருப்பு வைக்க வேண்டாம் - ஆட்சியர் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்

பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் அதிகளவில் பட்டாசுகளை வாங்கி தங்களது வீடுகள் அல்லது பொது இடங்களில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த கவனமுடன் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக கையாள வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்டு அதன் மூலம் ஏற்படும் தீ விபத்து, பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story