செல்ஃபி பாயின்டில் கலெக்டர் விழிப்புணர்வு!

செல்ஃபி பாயின்டில் கலெக்டர் விழிப்புணர்வு!

 செல்ஃபி பாயின்டில் கலெக்டர் விழிப்புணர்வு!

100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி இன்று திறந்து வைத்து செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பி பாயிண்ட்டில் வேலூர் மாவட்டத்தில் 100% கட்டாயமாக நேர்மையுடன் வாக்களிப்போம். வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

Tags

Next Story