டாஸ்மாக் கடைக்குள் அதிரடியாக ஆய்வு செய்த கலெக்டர்

இரூர் டாஸ்மாக் கடை எதிரே பிளாஸ்டிக் டம்ளர், கவர்கள் என குப்பை கழிவுகள் இருந்ததை பார்த்த கலெக்டர் கற்பகம் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் சென்று கொண்டிருந்தபோது இரூர் டாஸ்மாக் கடை எதிரே பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர்கள் என பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடந்ததை பார்வையிட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி எதிரில் இருந்த டாஸ்மாக் கடைகக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா, கண்ணுக்கெதிரே இவ்வளவு பிளாஸ்டிக்குகள் பரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என கேட்ட ஆட்சியர் சற்றுமுன்தான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை துவக்கி வைத்து விட்டு வருகிறேன். இங்கு இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது எனதெரிவித்தார்.

பின்னர் பார் உரிமையாளர் ஊழியர்களை அழைத்து தன் கண்முன்னே பிளாஸ்டிக்குகளை அள்ள உத்தரவிட்டார் இதனையடுத்து ஊழியர்கள் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆய்வு முடித்து திரும்பும்போது இந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களே இருக்கக்கூடாது அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story