கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.


அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் 14.06.2024 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 15 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தபி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், கிள்ளியூர், தோவாளை, திருவட்டார், விளவங்கோடு, கல்குளம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.

Tags

Next Story