காபி வித் இளம் வாக்காளர்கள் நிகழ்வில் கலந்துரையாடிய கலெக்டர்!

காபி வித் இளம் வாக்காளர்கள் நிகழ்வில் கலந்துரையாடிய கலெக்டர்!

ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா

காபி வித் இளம் வாக்காளர்கள் நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (26.03.2024) இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 23-கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 179-விராலிமலை சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நடைபெற்ற காபி வித் இளம் வாக்காளர்கள் நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (26.03.2024) இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story