புதிய பேருந்து - ஆட்சியர் துவக்கி வைப்பு

புதிய பேருந்து - ஆட்சியர் துவக்கி வைப்பு

புதிய பேருந்துகள் துவக்கி வைப்பு

வேலூர் மாவட்டம்,அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல் அரசம்பட்டு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு பேருந்துகளை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் மேல் அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தட பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் மேல் அரசம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனால் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்வின் போது அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்த குமார், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பாபு, அணைகட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா உட்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story