கோயில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

கோயில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை ஸ்ரீசித் தேஸ்வரர் கோயிலில் நடக்கும் புனரமைப்புப் பணிகளை மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார்

திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை ஸ்ரீசித் தேஸ்வரர் கோயிலில் நடக்கும் புனரமைப்புப் பணிகளை மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார்

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை ஸ்ரீசித் தேஸ்வரர் கோயில் திருப்பணிக்கான பூமிபூஜை நடந்தது. இக்கோயிலில் சுற்றுச்சுவர், கம்பிவேலிஅமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், குடிநீர் வடிகால், மற்றும் மின் இணைப்புகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளுக்காக துறை மூலம் ரூ.26.6லட்சம் தமிழக அரசு முதன்மை செயலர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன், இணைஆணையர் சிவானந்தம் ஆகியோர் வழங்கிய நிதியில்பணிகள் நடக்க உள்ளன.

இதற்கான பூமி பூஜை கோயில் வளாகத்தில் நடந்தது. எம்எல்ஏ துரைசந்திரசேகரன்,பூதலுார் ஒன்றிய குழு தலைவர்செல்லக்கண்ணு தலைமையில் நடந்தது. கோயிலில்நடைபெறும் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.. தாசில்தார் மரியஜோசப், ஊராட்சி தலைவர் வடிவழகன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

Tags

Next Story