வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை கலெக்டர் ஆய்வு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

திண்டிவனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை கலெக்டர் ஆய்வு. அதிகாரிகள் உடன் இருந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் திண்டிவனம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் திண்டிவனம் சப்- கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அங்குள்ள தேர்தல் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் பழனி திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தந்ததுடன், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் திவ் யான்சு நிகம், தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story