கலெக்டர் ஆய்வு
திருவாரூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவாரூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் அருகே புதூர் ஊராட்சியில் ரூபாய் 42.50 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நிதியில் கட்டப்பட்டு வரும் கிராம செயலகத்தினையும், ரூ.5.609 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் ,புதூர் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story