மொரப்பூர் காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார். மேலும் வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள் துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு, ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் பிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story