பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு.

பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்தில்  ஆட்சியர் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 
பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உணவகம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். இதற்காக அரசு சார்பில் பூந்தமல்லியில் உள்ள தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், பெங்களூரு, கர்நாடகா, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ப தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பயணிகளுக்கு நிழற்குடை, குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பேருந்து நிலையம் முழுவதும் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் படுத்தவும் உத்தரவிட்டார்.

Tags

Next Story