கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

சோகத்தூர் அருகே தர்மபுரி மாவட்ட கிளைச் சிறைச்சாலையை ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தருமபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட சோகத்தூர் அருகில் உள்ள தருமபுரி மாவட்ட சிறைச்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருகை பதிவு கைதிகளுக்கு முறையான அணுகுமுறை குறைபாடுகள் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் சாந்தி காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தார் . உடன் உதவி சிறை அலுவலர் கிருஷ்ணகுமார், தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story