ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு!

ராணிப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியரிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் கோடைகால வெப்ப நாட்களில் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கப்படுவதையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

Tags

Next Story