அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மதுராந்தகம் அடுத்த செய்யூர் அரசு பொது மருத்துவமனையில், இன்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த செய்யூர் அரசு பொது மருத்துவமனையில், இன்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்..மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையிடம் நலம் விசாரித்தார். அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் கண் சிகிச்சை, காது மூக்கு தொண்டை, எக்ஸ்ரே போன்றவைகள் மருத்துவமனையில் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்..இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர், மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story