நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் நடைபெறும் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்,கேளம்பாக்கம் தையூா் பழைய மாமல்லபுரம் சாலையில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தாா். இத்திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடியில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் ஆய்வு செய்தாா். மேலும், வண்டலூா் வட்டம் மாம்பாக்கம் கூட்டு ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க மாற்று ஏற்பாடு செய்வது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது நெடுஞ்சாலை துறை மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story