தபால் ஓட்டுகளை  பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

தபால் ஓட்டுகளை  பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

நாகர்கோவிலில் தபால் ஓட்டுகளை  பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.


நாகர்கோவிலில் தபால் ஓட்டுகளை  பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியூர்களில் இருந்து தபால் ஓட்டுக்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், அதிமுக சார்பில் ஜெயகோபால், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தபால் வாக்கு சீட்டுகள் அடங்கிய பைகள் கலெக்டர் அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு அறையில் போட்டி சீல் வைக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story