நாகர்கோவிலில் மக்களுடன் முதல்வர் முகாமில் கலெக்டர் ஆய்வு.

நாகர்கோவிலில் மக்களுடன் முதல்வர் முகாமில் கலெக்டர் ஆய்வு.
முகாமை ஆய்வு செய்த கலெக்டர்
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர் சமூக நலக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- இம்முகாமில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கிய தோடு, தங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். முகாமில் 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story