சமுதாயக் கிணறு அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

சமுதாயக் கிணறு அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் முள்வாய் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.96 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டன், பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

Tags

Next Story