ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படுவதை ஆட்சியர் ஆய்வு!

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கைனூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படுவதை ஆட்சியர் வளர்மதி ஆய்வு செய்தார்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கைனூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.7 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டன். பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story