குமரியில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு !

ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படும்.
மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி வைப்பறையில் வைக்கப்படும். அதற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், முதல் தளத்தில் குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், இரண்டாம் தளத்தில் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்படவுள்ளது.
அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
