கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை ஆட்சியர் ஆய்வு

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை ஆட்சியர் ஆய்வு

ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் தெ‌. பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (21.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story