வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு தர்மபுரி பாராளுமன்ற தொகுதி பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் இருந்து வாகனங்கள் மூலம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகளை தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story