புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட  ஆட்சியர் அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர் முருகேசன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல் நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச் சூழலை பேணிக் காப்போம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story