தொழிற்சாலை பணியாளர்களுக்கு ORS கரைசல் வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

தொழிற்சாலை பணியாளர்களுக்கு ORS கரைசல் வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

 ஆட்சியர் சாந்தி

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொழிற்சாலை பணியாளர்களுக்கு ORS கரைசல் வழங்க மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க வேண்டும். மேலும் மாவட்டத் தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், வாரச் சந்தைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் என 20-க்கு மேற்பட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story