தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கிய கலெக்டர்!

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கிய கலெக்டர்!

ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா 

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழகினார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட,180-புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து பார்வையிட்டு, அரசு பேருந்துகளில் பயணம் செய்த வாக்காளர்களுக்கு, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொ) ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story