வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு

வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு

காரியாபட்டி அருகே வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். 

காரியாபட்டி அருகே வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வெடிபொருள் நிரப்பும் அறையில் வாகனத்தில் இருந்து வெடிபொருள் இறக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.‌ உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை வேளையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.‌

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெடி விபத்து குறித்தும் எவ்வளவு வெடி பொருட்கள் இருந்தது என்பது குறித்தும் விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும், உயிரிழந்தவர்களின் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.‌

Tags

Next Story