புதுகை இ சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு!

புதுகை இ சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு!

ஐ.சா. மெர்சி ரம்யா

புதுக்கோட்டை, ஜூன் 2: இ-சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஜூன் 2: இ-சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அரசு இ-சேவை மையங்களில் வருவாய்த் துறை சான்றிதழ்கள்- ரூ.60, ஓய்வூதியத் திட்டங்கள்- ரூ.10, இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள்-ரூ. சமூக நலத்துறை திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புநிதியுதவித் திட்டம் ரூ.120, மாற்றுத் திறனாளி தொடர்பான நலத் திட்டங்கள்- ரூ.10 என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட இ- சேவை மையங்களில் இந்த சேவைக் கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வரப்பெற்று உறுதி செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான விலைப்பட்டியல், அரசு அங்கீகாரம்பெற்ற பெயர்ப் பலகை, சேவை மையம் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 5 18004256000 முதலியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து, அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ- சேவை மையங்களை அணுகி உரிய கட்டணத்தில் விண்ணப்பித்து பயன் பெறல இ-சேவை மையங்களில் இணையவழிபணப்பரிவர்த்தனை வசதியும் உள்ளது. அதிக சேவைக் கட்டண வசூல் தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத A 1100, 18004256000 ஆகிய எண்களில் புகார்களைத் தெரிவிக்கலாம்.

Tags

Next Story