பரதநாட்டிய கலைஞருக்கு கலை இளமணி விருது கலெக்டர் பழனி வழங்கினார்

பரதநாட்டிய கலைஞருக்கு கலை இளமணி விருது கலெக்டர் பழனி வழங்கினார்

பரதநாட்டிய கலைஞருக்கு கலை இளமணி விருது 

பரதநாட்டிய கலைஞருக்கு கலை இளமணி விருது கலெக்டர் பழனி வழங்கியதையடுத்து சமூக ஆர்வலர்கள் பாராட்டு
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையில் விழுப்புரம் மாவட்ட கலை மன்றம் சார்பாக 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டிற்கான மாவட்ட கலை மன்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மல்லர் கம்பம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பொற்கிழி வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பரதநாட்டிய கலையில் சிறந்து விளங்கிய விழுப்புரத்தை சேர்ந்த மோ.கிருத்திகாஸ்ரீக்கு கலை இளமணி விருது மற்றும் ரூ.4 ஆயிரத்திற்கான பொற்கிழியையும் மாவட்ட கலெக்டர் சி.பழனி வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் விழுப்புரம் நாட்டியாஞ்சலி நடனப்பள்ளி நிறுவனர் ஜி.கே.ரம்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story