குமரி தந்தை மார்ஷல் நேசமணி  சிலைக்கு ஆட்சியர் மரியாதை 

குமரி தந்தை மார்ஷல் நேசமணி  சிலைக்கு ஆட்சியர் மரியாதை 

மாலை அணிவித்து மரியாதை 

குமரி தந்தை மார்ஷல் நேசமணி  சிலைக்கு ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை மார்ஷல் நேசமணி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து சிலைக்கு மாலை அணிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மார்ஷல் நேசமணி மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story