செங்கல்பட்டில் லேசா் கண்புரை சிகிச்சை கருவிக்கான நிதி வழங்கிய கலெக்டர்

செங்கல்பட்டில் லேசா் கண்புரை சிகிச்சை கருவிக்கான நிதி வழங்கிய கலெக்டர்


செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு லேசா் கண்புரை சிகிச்சை கருவிக்கான நிதியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.


செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு லேசா் கண்புரை சிகிச்சை கருவிக்கான நிதியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு லேசா் கண் புரை அறுவை சிகிச்சை செய்வதற்கான கருவியை கொள்முதல் செய்யவும் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வா் மரு.ராஜஸ்ரீயிடம் ரூ.17 லட்சத்துக்கான அனுமதியை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா். இதன்மூலம் கண்புரை அறுவை சிகிச்சை பெறுவதற்கு சென்னை கண் மருத்துமனைக்கு செல்லாமல் காலதாமதம் இன்றி செங்கல்பட்டு மருத்துமனையிலேயே சிகிச்சை பெற்று பயன்பெறலாம். கண் மருத்துவா் பாஸ்கா் உடனிருந்தாா்.

Tags

Next Story