காங்கேயம்: ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி கூட்டம்
![காங்கேயம்: ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி கூட்டம் காங்கேயம்: ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி கூட்டம்](https://king24x7.com/h-upload/2024/06/21/558768-1000562896.webp)
ஆட்சியர்
காங்கேயத்தில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் 272 மனுக்களை பெற்றார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முதல் நாள் மனுக்கள் பெறும் நிகழ்வு துவங்கியது.
இந்நிகழ்வில் காங்கயம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து 272 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
Next Story