வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், எஸ் பி ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், எஸ் பி ஆய்வு
குமரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், எஸ் பி
நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தர வதனம் ஆகியோர் இன்று (11.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், - கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படும். மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி வைப்பறையில் வைக்கப்படும். அதற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வுகளில் உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story