மாணவர்களின் வாசிக்கும் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்!

காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளின் வாசிக்கும் திறனை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவ மாணவிகளை புத்தகங்களை படிக்க வைத்து வாசிக்கும் திறனை ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கே வி குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அதே பகுதியில் உள்ள பகுதிநேர கூட்டுறவு நியாய விலை கடையில் பார்வையிட்டு பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.



Tags

Next Story