கோடியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

கோடியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோடியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து வட்டார மருத்துவர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறிப்பேடுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யுவன் சிங், செவிலியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள உடனிருந்தனர்.

Tags

Next Story