உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

உளுந்துார்பேட்டையில் நடந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாமையொட்டி ஆட்சியர் ஷ்ரவன்குமார் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை தொடர்பாகவும், மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின், அரசு ஐ.டி.ஐ., மாணவர் விடுதியில் மாணவர் தங்கும் அறை, கழிவறைகள் மற்றும் சமையல் கூடங்களை ஆய்வு செய்தார். அப்போது போதிய மின் விளக்குகள், அறைகளில் கொசு வலை ஏற்படுத்திக் கொடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story