மழை பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

மழை பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் மழை நீர் குடியிருப்பு பகுதிகள் ,பள்ளி வளாகங்கள், சாலைகள் என அனைத்து பகுதிகளில் சூழ்ந்திருந்தது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டிருந்தது. அதில், பள்ளிகளில் தூய்மைப் பணிகள், மின்சாரப் பொழுதுகள் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தி இருந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் நீர் சூழ்ந்து கொள்ளாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கொளப்பாக்கம் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதையும் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடக்க வேண்டிய அரையாண்டு பள்ளி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story