வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ், நடந்துவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கன்னிச்சேரி புதூர் ஊராட்சி, தியாகராஜபுரம் கிராமத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும், தம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.82 இலட்சம் மதிப்பில் சர்ச் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் நிலவரம், தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Tags

Next Story