வெம்பக்கோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.2.15 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பில்; புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்;டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம்; கட்டப்பட்டு வருவதையும், அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இ.இராமநாதபுரம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும், சங்கரபாண்டியபுரம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Tags

Next Story