வெள்ளியம்பாளையத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.

வெள்ளியம்பாளையத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டனர்.
வெள்ளியம்பாளையத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, நடந்தை ஊராட்சியில் உள்ள வெள்ளியம்பாளையத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நாள்தோறும் குடிநீர் சீராக வழங்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதனை சீர் செய்து, சரியான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவலர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story