தேர்தல் விழிப்புணர்வு மின்னணு பதாகையை பார்வையிட்ட ஆட்சியர்

தேர்தல் விழிப்புணர்வு மின்னணு பதாகையை பார்வையிட்ட ஆட்சியர்

தேர்தல் விழிப்புணர்வு மின்னணு அலாரம்

நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு மின்னணு பதாகையை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மணிமேடையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு பதாகையில் வாக்காளிக்க இன்னும் (VOTE ALARM) ,இத்தனை நாள் மற்றும் நேரம் குறித்து பொதுமக்கள் உள்ளிட்டோர் அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உட்பட துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story