வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

 குடவாசல் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

குடவாசல் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடவாசல் அருகே அதம்பார் ஊராட்சியில் ரூபாய் 15.38 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலையினையும், ரூபாய் 16.35 லட்சம் மதிப்பீட்டில் தேக்கர வேலி ரோடு அமைக்கப்பட்டுள்ள சாலையினையும் ,தேதியூர் ஊராட்சியில் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றங்கரை காலனியில் அமைக்கப்பட்டுள்ள சாலையினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது குடவாசல் வட்டாட்சியர் தேவகி, குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story