ரூ.1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

ரூ.1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, செம்பியநத்தம் ஊராட்சியில் உள்ள ராயப்ப கவுண்டனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் வாணிஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சைபுதீன், செம்பியநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ஊள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மனுநீதி நாள் முகாமில், ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 238 மனுக்களில், தகுதி வாய்ந்த 149 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 14- லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். நலத்திட்டங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story